Home கவிதை தனிமை

தனிமை

by சங்கர்

நினைவுகளை கிளறி
கடந்த காலத்தை
கடைந்தெடுத்து
தவில் பாடி
ஒற்றைக் கனவில்
படகோட்டும் பலம்
தனிமைக்கே உரித்து

சிந்தனைத் திறன்
செயலாய் உருவெடுக்க
உடலும் உள்ளமும்
நின் மதிகொள்ள
இடம் கொடுத்து
வரம் தருவது
தவம் பெறும்
தனிமையில்தான்

சுய சிந்தனைக்கு
தாள்ப்பாள் இட்டு
காப்ரேட் கம்பனிகளின்
காசோலைக்கு கவிழ்ந்து
காலமோட்டும் காலமதில்
கொரோனா கொடுத்த
வைர விடுதலை
தனிமைப்படுத்தலில் தனிமை!

கச்சிதமாய் கைப்பற்ற
இதுவே தருணம்
சிந்தனை சிறக்க
இதுவே தருணம்
புதிய முய்ற்சிகள் சிறக்க
இதுவே தருணம்!

You may also like

Leave a Comment