Home கவிதை உனக்கென்று ஓர் கற்பனை

உனக்கென்று ஓர் கற்பனை

by சங்கர்

உனக்கென்று ஒருநாள் கற்பனை நாடினேன் பெண்ணே…
அதை இருளில் கோர்த்தேன்..

உன்னிடத்தில், உனக்காக சேர்த்து சூடினேன்…

உடலுருவம் இல்லாமல் உறுப்பில்லாமல் பல கற்பனைகள்..
உன் முகம் தானடி அதற்கு லட்சணம் வார்த்தது…

வாய்ப்பினால் அடைந்த கற்பனையெல்லாம் என்னிடம் நீ காட்டிய காய்ப்பினாலடி…

உன் வெறுப்பில் ஓர் விநோதம் இங்கே…

மூடன் போல் முடிவில்லாது சிந்திக்கிறேன்…
மூடத்தனத்தில் மூழ்கி முத்திரை பதிக்கிறேன்..

வரையறை இல்லாமல் இது வளரத்தான் போகிறது…
வருங்காலத்தில் இது மலரத்தான் போகிறது….
இவ்வுலகம் இதைக் கண்டு மிரளத்தான் போகிறது..

You may also like

Leave a Comment