Home கவிதைஇறைவன் தேடுகின்றேன் உனை

தேடுகின்றேன் உனை

by சங்கர்

அனலைப் படைத்து அதனை உடலில் புகுத்தி
உடலைக் காக்க நிரம்ப நீரைச் செலுத்தி
நீரினால் குருதியைக் கரைத்து நரம்பால் சுழலவிட்டு
நவரங்கமும் பரவ இருதயத்தை ஆக்கி
நாள் தோறும் புதுப்பிக்க களைப்பைக் கொடுத்து
களைப்பு நீங்க உறக்கமும் உறு பசியையும் கொடுத்து
உற்சாகம் அடைய சிறு மூளையையும் படைத்து
சிறப்பாக சிந்திக்க மனதை எங்கோ உடலில் வைத்து
ஒவ்வொரு நாளும் ஒருவாறு நாலு நிகழ்வைத் தந்து
ஒவ்வொன்றிலும் பெரிய சிறிய அனுபவங்காட்டி
தீர்வால் தெளிவையூட்டி தெளிவால் திடத்தைக் காட்டிய
தேவர்களுக்கெல்லாம் தேவே தேடுகின்றேன் உனை
தேடுவோர் மன மகிழ தேவையான உருவெடுத்து வா…
– – – நன்னாடன்.

You may also like

Leave a Comment