உலகில் பறந்து கிடைக்கும்
படைப்புகள் அத்தனைக்கும்
முடிவு உண்டு , அது நட்சத்திரமோ
கோள்களோ இல்லை , கல்லோ
மண்ணோ, கடலோ , சமுத்திரமோ
இல்லை மனிதரோ, மிருகமா ,தாவரமோ
ஆனால் இவற்றைப் படைத்தவன் அவனோ
ஆதி, அந்தம் இல்லாதவன் ….அதனால்
இருப்பான், இல்லாததுபோல் இருப்பான்
பார்த்தும் நாம் உணராமல் ……..அதனால்
அவன் இல்லை என்பார் சிலர்
கவிதை
இப்போதெல்லாம் நாம்
வெறும் பணம் கொட்டும்
இயந்திரமாகத்தான் பார்க்கப்படுகின்றோம்
சொல்வதொன்று செய்வதொன்று
என்ற நிலையே அதிகமாகிக்கொண்டுவருகிறது
தேவை வேறு விருப்பு வேறு
என்ற வேறுபாடே அற்றுவிட்டது
இப்போ என்ன, எல்லாம் இருக்கிறது
அதனால் கூடிவிட்டது என்ற பேச்சே சலித்துவிட்டது
பிரச்சனைகள் வரும்போது என் விருப்புகளே
அதற்கு காரணம் என்ற பேச்சு வேறு
முள்ளாய் முளை விடுகிறது
நம் உணர்வுகள் மதிக்கப்படா இடத்தில்
எதற்காக மண்டியிட்டு வாழ்கிறேன்
என்னால் எல்லாவற்றிற்குமாக
விடை காண முடிந்தாலும்
அவற்றிற்கான கேள்விகளையே
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
எதற்காக இந்த வேடமிட்ட வாழ்வு
நானாகத்தானே தேடிக் கொண்டேன்!
அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு
எந்த நிறத்தாலும் உணர வைக்க முடியாதது நட்பு
பள்ளி நட்பு
கடலில் கரையலாம் உப்பு
எதிலும் கரையாதது நட்பு
நண்பராக இடையிலும் வரலாம்
அவர் இறுதி வரையிலும் வரலாம்
மலர்ச்சி தரும் அன்பின் சின்னம்
நட்பின் பிரியா வண்ணம்
குறைகளை கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் உறவு
குறைகளை திருத்துவதே பள்ளி நட்பின் கருவு
உலகின் முக்கோணங்களிலும்
அன்பே வெல்லும்
