• முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்
Tamil Poems
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கவிதைநட்பு

அவளுக்கும் அவள் அன்பனுக்கும்

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

நகமில்லாத விரலைகளை
நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது

விதவிதமான நகப்பூச்சுகள்
வாங்கிக் குவித்து
அழகுபார்க்கும் அவளுக்கு
மட்டுமல்ல
சொரியச் சொரியப்
புண்ணாகிபோன அரிப்பால்
அவதியுறும் அவள் கணவனுக்கும்கூடத்தான்.
**
மெய்யன் நடராஜ்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதைநட்பு

பள்ளி நட்பு

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு
எந்த நிறத்தாலும் உணர வைக்க முடியாதது நட்பு


பள்ளி நட்பு

கடலில் கரையலாம் உப்பு
எதிலும் கரையாதது நட்பு

நண்பராக இடையிலும் வரலாம்
அவர் இறுதி வரையிலும் வரலாம்

மலர்ச்சி தரும் அன்பின் சின்னம்
நட்பின் பிரியா வண்ணம்

குறைகளை கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் உறவு
குறைகளை திருத்துவதே பள்ளி நட்பின் கருவு

உலகின் முக்கோணங்களிலும்
அன்பே வெல்லும்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதைநட்பு

நண்பன்

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

நல்ல நண்பன் தன் நண்பனுக்காக தன்
உயிரைக்கூட தியாகம் செய்திட அஞ்சிடான்
நண்பன் உயிரைத் தன் உயிராகவே எண்ணுபவன்
அவன் . அவன் நண்பனும் இவன் எப்படியோ
அப்படியே நினைத்து வாழ்பவன்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள்

துன்பங்கள்

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதை

நீயும் நானும்

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

வானத்தில் கண்சிமிட்டிய ஒற்றை விண்மீனை
ஒருவரும் அறியாது உனக்காய் களவாடி
கைக்குட்டைக்குள் பொதிந்து வைத்தேன்….

நீயும் நானும் தன்னந்தனியே ஏகாந்தவெளியில் சந்திக்கையில்
இதயம் சுமந்த அன்பை
முத்தமழையால் நீ பொழிகையில்
ஈடாய் உனக்கதை பரிசளிக்க….

விரைவில் வந்துப் பெற்றுக்கொள்….
வானம் என்னைத் தேடுகிறது….
பறிகொடுத்த தன் விண்மீனை மீட்டெடுக்க……

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதை

தனிமை

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

நினைவுகளை கிளறி
கடந்த காலத்தை
கடைந்தெடுத்து
தவில் பாடி
ஒற்றைக் கனவில்
படகோட்டும் பலம்
தனிமைக்கே உரித்து

சிந்தனைத் திறன்
செயலாய் உருவெடுக்க
உடலும் உள்ளமும்
நின் மதிகொள்ள
இடம் கொடுத்து
வரம் தருவது
தவம் பெறும்
தனிமையில்தான்

சுய சிந்தனைக்கு
தாள்ப்பாள் இட்டு
காப்ரேட் கம்பனிகளின்
காசோலைக்கு கவிழ்ந்து
காலமோட்டும் காலமதில்
கொரோனா கொடுத்த
வைர விடுதலை
தனிமைப்படுத்தலில் தனிமை!

கச்சிதமாய் கைப்பற்ற
இதுவே தருணம்
சிந்தனை சிறக்க
இதுவே தருணம்
புதிய முய்ற்சிகள் சிறக்க
இதுவே தருணம்!

0 comment
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Recent Posts

  • அவள் பார்வை
  • எனது தேவதை
  • வெறுப்பது யாராக இருந்தாலும்..
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
  • முழுமதி

Popular Posts

  • வெறுப்பது யாராக இருந்தாலும்..

  • முழுமதி

  • மிருதுளாவின் மழலை

  • அன்பே என்னிடம் நீ கூறு

  • எங்கே போகிறோம்?

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
Tamil Poems
  • முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்