• முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்
Tamil Poems
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கவிதைகாதல்

யாரும் அறியார் பெண்ணே

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

யார் அறிவார் பெண்ணே

முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது

பிடித்தது முதல் இரசித்தும்
இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது

பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை
இருந்தும் இது ஏதோ செய்கிறது

யார் அறிவார் பெண்ணே

ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம்
அவை நமக்காய் அரும்புகிறது

சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய்
நம்முடன் வருவதும் துணையாய் இருக்கிறது

பேச்சுக்களின் தாகம் குறைந்து மௌனத்தின்
குளிர் காற்றை அருகருகில் உணர்ந்தோம்

திடீர் பார்வைகளில் சிக்கி கொண்டு புருவத்தை உயர்த்தி
ஏனென்கையில் உதடுகளை பிதுக்கி ஏதுமில்லை என்பதில் தான்
முதல் தகவல் பரிமாறினோம்

யார் அறிவார் பெண்ணே

அழகியலாய் அனைத்தும் தெரிந்திட
கூட்டமுடன் கோவில்களுக்கு தனியே சென்றோம் – காத்திருக்கும்
வரிசைதனில் நாவாட பயின்றோம்

முழுவதும் இருள் போர்த்தி இரவது வரும் போது
தொலைவினில் இருக்கும் நாம் அருகினில் ஏதோ தேடுவோம்
அகம் முழுவதும் ஆய்ந்திடுவோம்

உன்னிடம் ஓர் நாள் உரைத்திட வேண்டுமென்று
சில வார்த்தை மட்டும் நான் பத்திரம் செய்திருக்கிறேன் – அவை
தப்பியும் வந்திடாமல் காலன் என் நாவில் கலங்காமல் தடுக்கிறான்

சொல்லாமலே இனித்திடும் காலமிதில்
நின் கூந்தல் தீண்டும் நெருக்கம் போதும்

மௌனமாய் அமர்ந்திருக்கும் இருக்கைகள் போதும்

ஓரப்பார்வைகளும் கன்னம் சிவக்கும் சிரிப்புகளும் போதும்

யார் அறிவார் பெண்ணே

இரசனைகள் நம்முள் புதைந்திருக்கிறது

அதில் காதல் மலர்கள் பூக்குமோ என்னவோ

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதைகாதல்

​நல்லை அல்லை – காற்று வெளியிடை

by சங்கர் April 8, 2020
written by சங்கர்

மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே.

காற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது.

ரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை.

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாய் ஒரு நுண்ணிசையை உணர முடியும். அத்துணை நுணுக்கங்கள் அதனுள் புதைந்திருக்கும்.

அதுவும் தமிழார்வம் கொண்ட மும்மூர்த்திகள் இணையும் போது அதன் தரம் விலைமதிபற்றதாகிறது.

ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள், மணிரத்னத்தின் காட்சியமைப்பு.

இவற்றில் எது நம் மனதை கொள்ளை கொண்டது என பிரித்தரிதல் அரிது. சரி நல்லை அல்லை பாடலுக்கு வருவோம்.

இந்த பாடல் வரியின் அர்த்தம் மிக எளிது. நல்லை என்றால் நன்று. அல்லை என்றால் இல்லை என பொருள்படும்.

இச்சொல் குறுந்தொகையில் வரும் சொல்லேடு. தலைவியானவள் வெயிலில் வாடுவது நல்லை அல்லை என அதில் வரிகள் வரும்.

சங்க தமிழ் சொற்களை இயல்பாக பயன்படுத்த வைத்த பெருமை வைரமுத்துவையே சேரும். இவர்கள் இணைப்பில் உருவான நறுமுகை பாடல் ஒரு சிறந்த குறுந்தொகை உதாரணம்.

அந்த மாதம் என பொருள் கூறும் ‘அற்றை திங்கள்’ என்ற வரிகளை எளிமையை நம்மை பாட வைத்திருப்பர். பூம்பாய்வா, ஆம்பல்(அல்லி) எல்லாம் நாம் ஏற்கனவே அறிந்தது தான்.

நல்லை பாடல் ஒரு ஆண் பெண்ணிடம் உரைப்பது போன்று மெல்லிய காதலை வெளிபடுத்துவது. எப்போதும் போல இதற்கெனவே சிறந்த பாடகரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சத்ய பிரகாஷ் ராசாளி பாடலை பாடியவர். அவளும் நானுமில் எவ்வாறு வரிகளுக்கும் குரலுக்கும் வலிமை அளித்து இசையை பதிந்த உத்திதான் இங்கும் மின்னுகிறது.

வைரமுத்து வரிகளில் உள்ள சொற்களை தனித்தனி கவிதைகள் என்றே சொல்லலாம். தேடும் வேளையில் முகில் சூடி ஓடிவிட்டாய் என நிலவை உவமையாவதும் நட்சத்திர காட்டில் என்னை அலைய விட்டாய் என்பதும் நயம்.

இப்போதெல்லாம் பெண்களை மலர், பூ என்று வருணிக்கிறார்கள். சங்க தமிழில் அவள் பருவத்திற்கு ஏற்ப பூக்களின் பருவத்தை பிரித்திருப்பார்கள்.

முகை, முகிழ், மொட்டு, மலர் என மலரின் பருவங்கள் இங்கு வரிகளாய் பூத்திருக்கின்றன.

முகை, முகிழ், மொட்டான நிலைகளிலே முகந்தோட காத்திருந்தேன்.

மலர் என்ற நிலை பூத்திருந்தாள், மணம் கொள்ள காத்திருந்தேன்.

மகரந்தம் நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்.

நாறும் மலரே என்பதை தவறாக அர்த்தம் கொள்ள கூடாது. தமிழில் நாற்றம் என்றால் நறுமணம் என்றே பொருள். துர்நாற்றம் என்றால் தான் நுகர முடியாதவை.

பாடலில் நாயகனின் தேடல் அவளின் ஊடலை பற்றி நல்லை அல்லையென அளவாடுவது அற்புதம்.

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…

மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே… #நல்லைஅல்லை

நான் தேடும் போது மட்டும் நீ முகில்(மேகம்) சூடி போவதென்ன என கணைகள் தொடுக்கிறார் கவிஞர்.

நீ செய்வது நன்றில்லை நன்னிலவே, நள்ளிரவே என உருவகங்கள் உள்ளுர செய்கிறது.

பாடலின் இடையே வருல் சின்மயின் ஹம்மிங் வருடி செல்வதை உணராமல் பாடல் முடிவுறாது. நிலவின் பிரகாசத்தை போல மலர் விரியும் விடியற் போல.

ரஹ்மான்- வைரமுத்து இணையின் தமிழ் வரிகளையும் இசை வளமையும் மெச்ச யவருமில்லை. இன்னமும் மணிரத்னரத்தின் காட்சியமைப்பு மலர்வதை காண காத்திருக்கச் செய்வது நல்லை அல்லை.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
நூல் விமர்சனம்விமர்சனம்

எங்கே போகிறோம்?

by சங்கர் December 27, 2019
written by சங்கர்

அகிலன் அவர்களால் எழுதப்பட்ட நூல்., எங்கே போகிறோம் ?

காந்திய காலத்து எதார்த்த நாவல். 1972-ல் மக்களாட்சி என்ன என்பதை உணராத மக்களிடம் முடியாட்சி தத்துவத்தை விதைக்க முற்பட்ட பல்வேறு அரசியல் தலைவர்களைப் பற்றிய நாவல்.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள்

வெற்றி தோல்வி

by சங்கர் December 27, 2019
written by சங்கர்

வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது இறுதியானதுமல்ல ..!

0 comment
0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் – கடவுள் வாழ்த்து

by சங்கர் December 27, 2019
written by சங்கர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

குறள் – 1

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
மழை

மழைக்கு ஒதுங்கிய வானம்

by சங்கர் December 26, 2019
written by சங்கர்

வெறித்துப் பார்க்கிறது வெளிறிய வானம்/
விடியலைத் தேடிடும் வான்மகள் தாபம்/
கொட்டிய நீரில் கரைந்ததோ துயரம்/
எட்டிப் பார்க்கும் முகத்தில் சோகம்/
சொடுக்குப் போட்டுத் தொடுக்கிறேன் கேள்வியை/
துடுக்கான வான்மகளே ஒதுங்கி நிற்பதேன்/
அடைகாத்தக் கருக்களை இழந்தாய் எதற்கு/
முறையோடு பதில்சொல் வைத்திருக்கிறேன் கணக்கு/
ஈர்த்துப் பிடித்தேன் நீரில் கருக்களை/
சேர்த்து வைத்தேன் ஆசைக் கனவுகளை/
ஒட்டிய வயிறும் பொய்த்தக் கனவும்/
கருகியப் பயிரைக் கைகளால் தடவும்/
நலிந்த உழவன் கண்களைக் கண்டேன்/
கலைந்தது கருக்கள் கிழிந்தது வயிறு/
சோவெனக் கொட்டியது மழை வெள்ளம்/
குளிர்ந்த பூமியால் சிலிர்த்தது தாய்மை/
மெல்லிய விசும்பலோடு சுருங்கியது கருப்பை/
மூடிய இமைகளில் சொட்டுது கண்ணீர்/
மீண்டும் விழுகுது பூமியில் தூறல்கள்.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Recent Posts

  • அவள் பார்வை
  • எனது தேவதை
  • வெறுப்பது யாராக இருந்தாலும்..
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
  • முழுமதி

Popular Posts

  • வெறுப்பது யாராக இருந்தாலும்..

  • முழுமதி

  • மிருதுளாவின் மழலை

  • அன்பே என்னிடம் நீ கூறு

  • எங்கே போகிறோம்?

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
Tamil Poems
  • முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்